இதுதான் தி.மு.க. ஆட்சியின் 100 நாள் சாதனை.! பாஜக தலைவர் அண்ணாமலை பரபரப்பு பேட்டி.!
சுதந்திரப் போராட்ட வீரர், ஒண்டிவீரனின் நினைவு நாளையொட்டி, திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஒண்
சுதந்திரப் போராட்ட வீரர், ஒண்டிவீரனின் நினைவு நாளையொட்டி, திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஒண்டிவீரன் மணிமண்டபத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக மத்திய மீன்வளம், தகவல் ஒலிபரப்புத் துறை மற்றும் பால்வளத் துறை இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ஆகியோர் விமானம் மூலம் இன்று தூத்துக்குடி வந்தனர்.
அங்கு செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, தி.மு.க. அரசு தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. மாறாக பா.ஜ.க. தொண்டர்களை கைது செய்துள்ளனர். கொஞ்சம் இனிப்பு, பெரிய கசப்பு, பெருவாரியான காரம்.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக முடித்து வைக்கப்பட்ட வழக்கில் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் முன்னாள் முதலமைச்சர் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. அதிமுக உறுப்பினர்கள் மீது எந்த தவறும்கிடையாது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக கொடநாடு வழக்கு விசாரிக்கப்படுகிறது என தெரிவித்தார்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362