×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தெறிக்கவிட்ட பாஜக துணைத்தலைவர் அண்ணாமலை.! தலைதெரிக்க ஓடிய ஐந்து கட்சி அமாவாசை!

பாஜகவின் துணைத் தலைவர் அண்ணாமலையின் எச்சரிக்கையை தொடர்ந்து, திமுகவினர் எழுதிய வாசகங்களை அவர்களே அழித்துள்ள சம்பவம் நடந்துள்ளது.

Advertisement

தமிழகத்தில் தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. இதுவரை இருந்ததை விட பாஜகவின் வரவேற்பு தமிழகத்தில் அதிகம் இருந்து வருகிறது. பல கட்சிகளில் உள்ள இளைஞர்களும் பாஜகவில் இணைந்து வருகின்றனர். சமீபத்தில் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை வேலையை ராஜினாமா செய்து பாஜகவில் இணைந்தார். அவருக்கு பாஜக மாநில துணைத்தலைவர் பதவி கொடுத்ததும் குறிப்பிடத்தக்கது. அதேபோல் காங்கிரசில் தீவிரமாக இருந்த நடிகை குஷ்புவும் சமீபத்தில் பாஜகவில் இணைந்தது பரபரப்பாக பேசப்பட்டது.

இந்தநிலையில், கரூர் மாவட்டத்தில் உள்ள திருக்காம்புலியூர் பகுதியில், சேலம் - மதுரை புறவழிசாலையில் " கோ பேக் மோடி " என்று திமுக சார்பில் விளம்பரம் செய்யப்பட்டு இருந்தது. இது போன்ற சுவரொட்டிகள் பல்வேறு இடங்களிலும் ஒட்டப்பட்டு இருந்தது.  இதையடுத்து, " கோ பேக் மோடி " என்னும் வாசகத்துடன் அடங்கிய போஸ்டர்களை ஒருவாரத்தில் திமுகவினரே அழிக்க வேண்டும் என்றும், இல்லையேல், நாங்கள் அதனை அழிப்போம் என பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை விடுத்தார். 

தொடர்ந்து பேசிய அண்ணாமலை பாஜக சார்பில் ஒட்டப்படும் சுவர் விளம்பரங்களில், 'ஐந்து கட்சி அமாவாசை மற்றும் சுடலை ராஜா' என்னும் பெயர்கள் இடம்பெறும். பிரதமருக்கு மதிப்பு கொடுக்கவில்லை என்றால் அரசியல் செய்ய முடியாது. நேர்மையான அரசியலுக்கு வாருங்கள். நீங்க செய்த சாதனையை வைத்து ஓட்டு கேளுங்கள் என தெரிவித்தார். இந்த நிலையில், தற்போது பாஜகவினர் ஒருபுறம் "கோ பேக் மோடி "வாசகத்தை நீக்கி வரும் நிலையில், திமுகவினரும் இதனை நீக்க துவங்கியுள்ளனர். பாஜக துணைத்தலைவர் அண்ணாமலை கோரிக்கைக்கு கிடைத்த உடனடி வெற்றியாக அப்பகுதியினர் பார்க்கின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#bjp #annamalai #dmk
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story