×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தடுப்பூசி செலுத்தாம எங்க போற?.. வலுக்கட்டாயமாக ஊசி போடும் அதிகாரிகள்.!

தடுப்பூசி செலுத்தாம எங்க போற?.. வலுக்கட்டாயமாக ஊசி போடும் அதிகாரிகள்.!

Advertisement

இந்தியா முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒமிக்ரான் வகை கொரோனா பரவலும் தற்போது உலக நாடுகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இதனால் தடுப்பூசி செலுத்தும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வரும் நிலையில், தடுப்பூசி செலுத்தாதவர்களும் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள அரசு சார்பில் தொடர் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. சுகாதாரத்துறை மூலமாக தடுப்பூசி செலுத்தும் பணிகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. 

இந்நிலையில், பீகார் மாநிலத்தில் உள்ள ஷேக்புரா பகுதியில், விவசாய நிலத்தில் பணியாற்றிக்கொண்டு இருந்த தொழிலாளி ஒருவருக்கு, சுகாதாரத்துறையினர் வலுக்கட்டாயமாக தடுப்பூசியை செலுத்தியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது. இந்த விடியோவுக்கு ஆதரவு, எதிர்ப்பு என கண்டன பதிவுகளும் வைரலாகியுள்ளன.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#India #Bihar #vaccination #video #Social media
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story