×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கணவனை ஏமாற்றி காதலனுடன் ஓட்டம் பிடிக்க பிளான் போட்ட இளம்பெண்.! அடுத்தடுத்து காத்திருந்த பேரதிர்ச்சி.!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் சீனிவாசன். இவர் கடந்த 10 ஆண்டுகளாக கோவை மாவ

Advertisement

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் சீனிவாசன். இவர் கடந்த 10 ஆண்டுகளாக கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள சோமனூர் பகுதியில் குடும்பத்துடன் தங்கியிருந்து ஓட்டல் நடத்தி வருகிறார். இவருக்கு கங்காதேவி என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். 

கடந்த 4 வருடங்களுக்கு முன்பு கங்காதேவி அந்த பகுதியில் பெண்கள் அழகு நிலையத்தை தொடங்கி நடத்தி வந்துள்ளார். வழக்கமாக பணி முடிந்து இரவு 8 மணிக்குள் அவர் திரும்பி விடுவது வழக்கம். ஆனால் அவர் நேற்று முன்தினம் அவர் அழகுநிலையத்தில் இருந்து வீடு திரும்பவில்லை.

இதனையடுத்து அவரின் கணவர் பியூட்டி பார்லருக்கு சென்று பார்த்த போது, கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கங்காதேவி மயக்க நிலையில் கிடந்துள்ளார். இதனையடுத்து அவரை மீட்டு வீட்டிற்கு அழைத்து வந்து விசாரித்த போது, அழகு நிலையத்திற்கு வந்த மூன்று நபர்கள், தனது கை, கால்களை கட்டி வாயையும் துணியால் அடைத்து, பாலியல் பலாத்காரம் செய்து தான் அணிந்திருந்த 19 சவரன் தங்க நகைகளை பறித்து சென்றுவிட்டதாக கூறியுள்ளார்.

இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த கங்காதேவியின் கணவர் காவல்நிலையத்திற்கு புகார் கொடுக்க சென்றுள்ளார். இந்தநிலையில் கங்காதேவி தனது வீட்டிற்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், கங்காதேவிக்கும், மதுரை காமராஜர்புரத்தைச் சேர்ந்த முத்துப்பாண்டி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது தெரியவந்தது.

முத்துப்பாண்டி சொந்த தொழில் தொடங்குவதற்காக தன்னிடம் இருந்த 19 பவுன் நகையை கங்காதேவி கொடுத்துள்ளார். மேலும் இருவரும் ஓடிப்போவதற்கும் திட்டம் தீட்டியுள்ளனர். இந்தநிலையில் கணவரை நம்ப வைப்பதற்காக, முத்துப்பாண்டியுடன் சேர்ந்து, நகைகொள்ளை போனதாக நாடகம் நடத்தியுள்ளார். அவர்களது திட்டப்படியே, முத்துப்பாண்டி, கங்காதேவியின் கை, கால்களை கட்டிப் போட்டுவிட்டு, நகைகளை எடுத்துச் சென்று விட்டார். 

போலீஸார் விசாரணையில் தனது நாடகம் மற்றும் முத்துப்பாண்டியுடன் உள்ள பழக்கம் கணவருக்கு தெரிந்து விடும் என்ற அச்சத்தில் கங்காதேவி தூக்கிட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து முத்துப்பாண்டியை கைது செய்து அவரிடம் இருந்த 19 பவுன் நகை பறிமுதல் செய்துள்ளனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#suicide #illegal affair
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story