பாவங்க!! தொப்புள்கொடிகூட அறுக்கல..!! இரத்தமும் சதையுமா குப்பை தொடையில் கிடந்த ஆண் குழந்தையின் சடலம்.. போலீசார் விசாரணை..
குப்பை தொட்டியில் பிணமாக கிடந்த ஆண் குழந்தையின் உடலை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்திவருக
குப்பை தொட்டியில் பிணமாக கிடந்த ஆண் குழந்தையின் உடலை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்திவருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பஸ் நிலையம் அருகே அரசு மருத்துவமனை இயங்கிவருகிறது. எப்போதும் பரபரப்புடன் இருக்கும் இந்த மருத்துவமனை அருகே குப்படி தொட்டி ஒன்று உள்ளது. மருத்துவமனைக்கு வந்த சிலர் அந்த குப்பை தொட்டியில் குப்பை போடுவதற்காக சென்றபோது, குப்பை தொட்டி உள்ளே பார்த்தபோது அவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.
ஆம், இரத்தக்கறையுடன் தொப்புள் கொடிகூட அறுக்கப்படாமல் ஆண் குழந்தை ஒன்றின் சடலம் துணிப்பையில் சுற்றப்பட்டவாறு அங்கு கிடப்பதை பார்த்துள்ளனர். உடனே இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தநிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
குழந்தை பிறந்து சில நிமிடங்களில் இங்கு போடப்பட்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். மேலும் குழந்தையை குப்பை தொட்டியில் வீசி சென்றது யார்? என்ன காரணம் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362