×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அட்டைப்பெட்டியில் போட்டு கொடுக்கப்பட்ட குழந்தையின் உடல்.! அரசு மருத்துவமனையில் அலட்சியம்.!

அட்டைப்பெட்டியில் போட்டு கொடுக்கப்பட்ட குழந்தையின் உடல்.! அரசு மருத்துவமனையில் அலட்சியம்.!

Advertisement

சென்னை புளியம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மசூத். இவரது மனைவி சௌமியா. இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் கடந்த 5ஆம் தேதி பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. ஆனால் மிக்ஜாம் புயலால் அவர்களுக்கு சரியான நேரத்தில் ஆம்புலன்ஸ் கிடைக்கவில்லை மேலும் மின்வசதி இல்லாமல் உரிய மருத்துவ உதவியும் பெற முடியவில்லை.

பின்னர் போலீசார் மற்றும் பலரது உதவியுடன் மசூத் தனது மனைவியை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆனால் அங்கு அவருக்கு குழந்தை இறந்தே பிறந்துள்ளது. இந்த நிலையில் இறந்த குழந்தை மசூத் மற்றும் சௌமியா தம்பதியினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இறந்த குழந்தை சரியான முறையில் துணி சுற்றப்படாமல் அட்டைப்பெட்டியில் போட்டுக் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் குழந்தையின் உடலை கொடுக்க லஞ்சம் கேட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இறந்த குழந்தையை அதன் தந்தை அட்டைப்பெட்டியில் போட்டு எடுத்துச் சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலான நிலையில் பலரும் அதற்கு கண்டனம் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து பிணவறை பணியாளர் பன்னீர்செல்வம் என்பவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#box #dead body #hospital
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story