×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

திருப்பூரில் கோர விபத்து 20 பேர் பரிதாப பலி! பயணிகளின் உறவினர்கள் தொடர்புகொள்ள அவசர உதவி எண்ணை அறிவித்தார் ஆட்சியர்!

Avinasi accident emergency contact number

Advertisement

திருப்பூர் மாவட்டம் அவினாசி தேசிய நெடுஞ்சாலையில் கண்டெய்னர் லாரியும், கேரள மாநில அரசு சொகுசு பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 20 பேர் பலியாகினர்.

திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில், கோர விபத்து ஏற்பட்டு பலர் பலி ஆகியுள்ளனர். பெங்களூரில் இருந்து  திருவனந்தபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த கேரள மாநில அரசு சொகுசு பேருந்தும், கோவையிலிருந்து சேலம் நோக்கி சென்றுகொண்டிருந்த கண்டெய்னர் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.  

அங்கு நடந்த கோர விபத்தில், பேருந்து நிலைகுலைந்து பேருந்தில் பயணம் செய்த 20 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். 

விபத்தில் பலியானவர்களின் உடலை அடையாளம் காணும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில்,  இந்த விபத்து குறித்து பயணிகளின் உறவினர்கள் தொடர்புகொள்ளவதற்காக 7708331194 என்ற அவசர உதவி எண்ணை அறிவித்து மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Avinasi #accident
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story