மதமாற்றம் செய்வதாக கூறி இளம் பெண் மீது தாக்குதல்... இந்து முன்னணி நிர்வாகி மீது புகார்.!
மதமாற்றம் செய்வதாக கூறி இளம் பெண் மீது தாக்குதல்... இந்து முன்னணி நிர்வாகி மீது புகார்.!

இந்து இளைஞரை காதல் திருமணம் செய்து கொண்ட கிறிஸ்தவ பெண்ணை தாக்கியதாக இந்து முன்னணி நிர்வாகி மீது புகார் அளிக்கப்பட்டு இருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த முருகன் மற்றும் பிரின்சி இருவரும் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு இரண்டு வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. தற்போது வடமதுரையில் சந்தை அருகே காய்கறி வியாபாரம் செய்து வருகின்றனர்.