×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ரகளை செய்த ரவுடி கும்பலை கண்டித்த ஆயுதப்படை காவலர் கல்லால் அடித்து கொலை... சென்னையில் நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்.!

ரகளை செய்த ரவுடி கும்பலை கண்டித்த ஆயுதப்படை காவலர் கல்லால் அடித்து கொலை... சென்னையில் நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்.!

Advertisement

ஆயுதப்படை காவலர் மதுபோதை ரௌடி கும்பலால் அடித்து கொல்லப்பட்டார்.

சென்னை ஆலந்தூர், கண்ணன் காலனியில் வசித்து வருபவர் விஜயன் (32). புதுப்பேட்டை காவல் நிலையத்தில், 2ம் நிலை ஆயுதப்படை காவலராக வேலை பார்க்கிறார். சம்பவத்தன்று தனது மைத்துனர் வாசுதேவனோடு பழவந்தாங்கல் சந்தைக்கு சென்றுள்ளார்.

அங்கு காய்கறிகளை வாங்கிவிட்டு வீட்டிற்கு வரும்போது, வாசுதேவனின் நண்பர் போனில் தொடர்பு கொண்டு தன்னை மர்ம கும்பல் காலனி மைதானத்தில் வைத்து தாக்குகிறது. அவர்கள் மதுபானத்தை அருந்தியதை தட்டிக்கேட்டதால் அடிக்கிறார்கள் என கூறியுள்ளார். 

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற விஜயன், வாசுதேவன் குடிபோதையில் இருந்த ரௌடி கும்பலை தட்டிக்கேட்க, அவர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். தாக்குதலில் விஜயன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

அவரை மீட்ட பொதுமக்கள் சிகிச்சைக்காக ஆலந்தூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்க, அவர்கள் மேல் சிகிச்சைக்கு சென்னை அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதற்கிடையே, கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்த பரங்கிப்பேட்டை காவல் துறையினர் ரௌடி கும்பலை சேர்ந்த அஜித், வினோத், ரவிக்குமார் உள்பட 4 பேரை கைது செய்தனர். மணிகண்டன் என்பவருக்கு வலைவீசி இருந்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற காவலர் நேற்று இரவு உயிரிழக்கவே, கைதானவர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Armed Guard murder #chennai #ஆலந்தூர் #சென்னை #ஆயுதப்படை காவலர் #murder case
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story