×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கல்லூரி மாணவி காரில் கடத்தல்.. பெண் கொடுக்காத ஆத்திரத்தில் தாய்மாமன் பகீர் செயல்.!

கல்லூரி மாணவி காரில் கடத்தல்.. பெண் கொடுக்காத ஆத்திரத்தில் தாய்மாமன் பகீர் செயல்.!

Advertisement

பெண் தராததால் ஆத்திரத்தில் கல்லூரி மாணவியை, காரில் கடத்தி சென்ற தாய்மாமன், பொதுமக்களால் தர்மஅடி கொடுக்கப்பட்டு காவல்துறையில் ஒப்படைக்கப்பட்டார்.

அரியலூர் அருகாமையில் உள்ள குறிஞ்சிநத்தம் கிராமத்தில் வசித்து வருபவர் முத்தையா (வயது 30). இவர் ரயில் நிலையத்தில் வெல்டராக பணியாற்றி வருகிறார் 

இந்த நிலையில், இவர் தனது அக்கா மகளை ஒருதலையாக காதலித்து வந்தபோது, திருமணம் செய்ய அவரது அக்காவிடம் என்று கேட்டுள்ளார்.

ஆனால், அதற்கு அவர் மறுப்பு தெரிவித்த நிலையில், ஆவேசமடைந்த முத்தையா மாணவி கல்லூரிக்கு சென்றபோது வழி மறித்து வலுக்கட்டாயமாக காரில் கடத்தி உள்ளார்.

இதனால் பயந்து போன மாணவி வெங்கடகிருஷ்ணபுரம் பகுதியில் கத்திக் கூச்சலிட்ட நிலையில், அப்பகுதி பொதுமக்கள் சந்தேகமடைந்து ஒன்றுகூடி காரை மடக்கி பிடித்துள்ளனர்.

பின் அவருக்கு தர்ம அடி கொடுத்ததில், "தான் பெண் கேட்டு தராததால் ஆத்திரத்தில், மாணவியை கடத்திச் சென்றுள்ளதாக கூறியுள்ளார்". இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், உண்மையை ஒப்புக்கொண்டதால் அவரை கைது செய்துள்ளனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Ariyalur #girl #college #police #Investigation
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story