2 சக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து... 2 பேர் பலி., 2 பேர் படுகாயம்.!
2 சக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து... 2 பேர் பலி., 2 பேர் படுகாயம்.!
அரியலூர் மாவட்டத்தில் உள்ள கடாரம்கொண்டான் கிராமத்தில் வசித்து வருபவர் ஜெயக்குமார். இவரின் தங்கை சஞ்சிதா. இவர்கள் இருவரும் நேற்று இருசக்கர வாகனத்தில் ஜெயங்கொண்டம் நோக்கி பயணம் செய்துள்ளனர்.
அப்போது, எதிர்திசையில் இருசக்கர வாகனத்தில் ரஞ்சித் குமார், கவுதம் ஆகிய 2 இளைஞர்கள் வந்துள்ளனர். இவர்களின் இருசக்கர வாகனம் புதுச்சாவடி அருகே வந்தபோது, இரண்டு வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில், வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட ரஞ்சித் குமார் மற்றும் கவுதம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், அண்ணன் - தங்கை இருவரும் படுகாயம் அடைந்தனர். இவர்கள் தற்போது ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362