×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இலந்தைப்பழத்தை பறிக்க வந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை.. அதிர்ச்சி சம்பவம்.!

இலந்தைப்பழத்தை பறிக்க வந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை.. அதிர்ச்சி சம்பவம்.!

Advertisement

தோட்டத்தில் பழம்பறிக்க வந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். 

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம், திருக்களப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 60). இவரின் தோட்டத்தில் இலந்தைப்பழ மரங்கள் உள்ள நிலையில், அதனை பறிக்க அப்பகுதியை சேர்ந்த சிறுவர் - சிறுமிகள் அவ்வப்போது வந்து செல்வது வழக்கம். 

இந்நிலையில், அப்பகுதியை சேர்ந்த 8 வயது மற்றும் 6 வயதுடைய இரண்டு சிறுமிகள் இலந்தை பழத்தை பறிக்க வந்த நிலையில், இளங்கோவன் 8 வயது சிறுமியை தனியே அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். 

வீட்டிற்கு சென்ற சிறுமி நீண்ட நேரமாக அழுதுகொண்டு இருந்த நிலையில், இதனைகவனித்த பெற்றோர் என்னவென்று விசாரணை செய்துள்ளனர். அப்போது, சிறுமி நடந்ததை தெரிவித்துள்ளார். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், ஜெயங்கொண்டம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 

இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர் போக்ஸோ சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு, இளங்கோவனை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Ariyalur
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story