×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஜாதிய பாகுபாடுகளும், ஜாதிய கொலைகளும் அதிகம் நடப்பது தமிழகத்தில் தான்: அண்ணாமலை அதிரடி..!

ஜாதிய பாகுபாடுகளும், ஜாதிய கொலைகளும் அதிகம் நடப்பது தமிழகத்தில் தான்: அண்ணாமலை அதிரடி..!

Advertisement

மதுரை மாவட்டம், காரைக்குடி செல்வதற்காக சென்னை விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் மதுரை விமானத்திற்கு வந்த பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை விமான நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பா.ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நாளை காலை 10 மணி அளவில் மதுரை விமான நிலையம் வந்த பிறகு இங்குள்ள தனியார் ஹோட்டலில் முக்கிய தலைவர்களை சந்திக்கவுள்ளார். இதனை தொடர்ந்து நாளை மாலை சிவகங்கை மாவட்டத்திற்கு புறப்படுகிறார். பா.ஜனதா கட்சியின் சார்பில் அங்கு மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது என்று தெரிவித்தார்.

அவர் மேலும், மருது பாண்டியர்களின் நினைவை போற்றும் வகையில் திருப்பத்தூர் சென்று பா.ஜனதா தேசிய தலைவர் மரியாதை செலுத்த உள்ளார். அதன் பிறகு மதுரையில் இருந்து விமானம் மூலம் டெல்லி செல்ல உள்ளார். தமிழகத்தில் தான் ஜாதிய பாகுபாடு அதிகம் உள்ளது. இந்தியாவிலேயே  ஜாதிய கொலைகள் அதிகம் நடப்பது தமிழகத்தில் தான் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#annamalai #TN BJP #Caste Discimination #Caste murder #tamilnadu #madurai
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story