தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

#Breaking: அண்ணா பல்கலை., மாணவி வன்கொடுமை விவகாரம்.. ஞானசேகரனுக்கு வலிப்பு.. மருத்துவமனையில் அனுமதி.!

#Breaking: அண்ணா பல்கலை., மாணவி வன்கொடுமை விவகாரம்.. ஞானசேகரனுக்கு வலிப்பு.. மருத்துவமனையில் அனுமதி.!

 Anna University Case update today Accuse Admitted Hospital due to Illness  Advertisement

 

அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் ஞானசேகரனுக்கு வலிப்புக்கான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த 19 வயது மாணவி, ஞானசேகரன் என்ற நபரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். காதலருடன் பல்கலைக்கழக வளாகத்தில் தனிமையில் இருந்த மாணவியை, காதலரை துரத்திவிட்டு ஞானசேகரன் பாலியல் வன்கொடுமை செய்திருந்தார். மேலும், நீ நான் அழைக்கும்போதெல்லாம் சார் ஒருவருடன் உல்லாசமாக இருக்க வேண்டும் எனவும் மிரட்டி இருந்தார். 

இதையும் படிங்க: அண்ணா பல்கலை., மாணவி விவகாரம்; ஞானசேகரனிடம் விடிய-விடிய விசாரணை.!

யார் அந்த சார்?

இந்த விஷயம் தொடர்பாக புகார் எழுந்து அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தி வந்த நிலையில், நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. மேலும், அண்ணா நகர் துணை ஆணையர் சினேகா பிரியா தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. முன்னதாக, கைது நடவடிக்கையின்போது தப்பிச் செல்ல மேற்பட்ட ஞானசேகரன், கால்களை முறித்துக்கொண்டார். 

Anna university

புழல் சிறையில் அடைப்பு - நீதிமன்ற காவல் விசாரணை

இதனால் மருத்துவ சிகிச்சைக்கு பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்டவர், நேற்று முன்தினம் சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகளால் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரணை வளையத்தில் வைக்கப்பட்டுள்ளார். அவரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வைக்கின்றனர்.

ஞானசேகரனுக்கு வலிப்பு

இந்நிலையில், காவலில் எடுத்து விசாரணை செய்யப்பட்டு வரும் ஞானசேகரனுக்கு திடீர் வலிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அதிகாலை சுமார் 3 மணியளவில் ஞானசேகரனுக்கு வலிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதனைத்தொடர்ந்து, அவர் மருத்துவ சிகிச்சைக்கு அனுமதி செய்யப்பட்டுள்ளார். ஞானசேகரன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. இதனால் மருத்துவமனை பாதுகாப்பை உறுதி செய்ய, கூடுதல் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அங்கு தங்கியிருக்கும் நோயாளிகள், அவர்களின் உறவினர்கள் சோதனைக்கு பின்னரே அனுமதி செய்யப்படுகின்றனர்.

இதையும் படிங்க: #Breaking: அண்ணா பல்கலை., மாணவி வன்கொடுமை விவகாரத்தில் வெளிவரப்போகும் உண்மை; நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Anna university #chennai #tamilnadu
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story