மனு அளிக்க வந்த மூதாட்டி தீக்குளிக்க முயற்சி: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு..!
மனு அளிக்க வந்த மூதாட்டி தீக்குளிக்க முயற்சி: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு..!
செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் அருகேயுள்ள வீரபோகம் கிராமத்தை சேர்ந்தவர் கல்யாணி (70). இவர் நேற்று செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் மனு அளிப்பதற்காக வந்திருந்தார்.
அப்போது திடீரென தனது பையில் வைத்திருந்த மண்ணெண்ணையை எடுத்து தலையில் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். இதனைக் கண்ட அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அவர் மீது தண்ணீர் ஊற்றினர்.
இதனைத் தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மூதாட்டி கல்யாணிக்கு சொந்தமாக வீரபோகம் கிராமத்தில் 8 சென்ட் இடம் இருந்ததாகவும், இதனை தனது மகன் வழி பேரன் ஞானசேகர் என்பவர் அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் உதவியுடன் தனது பெயருக்கு பட்டாவை மாற்றிக் கொண்டதாகவும் கூறினார்.
மேலும் வயதான காலத்தில் தன்னை கவனித்துக் கொள்ள யாரும் இல்லாத நிலையில், தனக்கு சொந்தமான இடத்தை விற்பனை செய்ய முயன்ற போது இந்த உண்மை தெரிய வந்ததாக கூறினார். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362