×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஐயோ.. இப்படியும் சாவு வருமா.. வீட்டின் ஜன்னலை திறக்க முயன்ற போது ஏற்பட்ட விபரீதம்..!

ஐயோ.. இப்படியும் சாவு வருமா.. வீட்டின் ஜன்னலை திறக்க முயன்ற போது ஏற்பட்ட விபரீதம்..!

Advertisement

சென்னை மாங்காடு பகுதியில் ஈஸ்வரி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று ஈஸ்வரியின் மகன் மதன் வீட்டின் ஜன்னலை திறக்க முயற்சி செய்துள்ளார். அவருடன் யுவன் சங்கர் என்பவரும் ஜன்னலை திறக்க உதவி செய்துள்ளார்.

அப்போது அவரின் கையானது உயர் அழுத்த மின்சார கம்பியில் பட்டதால் மின்சாரம் அவர் மேல் பாய்ந்துள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே மதன் மற்றும் யுவன் சங்கர் மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக பலியாயினர். இதனையடுத்து அவர்களைக் காப்பாற்ற முயன்ற அவரது தாய் ஈஸ்வரி மற்றும் மனோஜ் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர்.

பின்னர் அங்கிருந்தவர்கள் அவர்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதனையடுத்து தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த போலீசார் அவர்கள் இருவரது உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#electric shock #died #Investigation
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story