தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

#Breaking: மத்திய பட்ஜெட் 2025 எப்படி? - எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம்.!

#Breaking: மத்திய பட்ஜெட் 2025 எப்படி? - எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம்.!

aiadmk-edappadi-palanisamy-on-budget-2025 Advertisement

 

2025 பட்ஜெட் மாயாஜாலம் நிறைந்த பட்ஜெட்டாகவும், பீகாருக்கான அறிவிப்பாகவும் அமைந்துள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

 

2025 - 2026 மக்களவை கூட்டத்தொடர், இன்று பட்ஜெட் தாக்கலுடன் தொடங்கியது. இந்த மத்திய பட்ஜெட்டில், தனிநபர் வருமான வரம்பு அதிகரிப்பு, புற்றுநோய்க்கான மருந்துகளுக்கு வரிச்சலுகை மற்றும் வரிவிலக்கு உட்பட பல அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. மேலும், புதிய வருமான வரி சட்டம் 2025 அடுத்த வாரம் தனியாக தாக்கல் செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், எடப்பாடி பழனிச்சாமி பட்ஜெட்டை தமிழ்நாட்டுக்கு ஏமாற்றம், சுங்க வரிகள் குறைப்பு ஆறுகள் தருகிறது என கூறியுள்ளார். 

இதையும் படிங்க: #JustIN: அதிமுக - பாஜக கூட்டணி உறுதி; சூட்சமத்தை கூறிய நயினார் நாகேந்திரன்.!

வருமான வரி உயர்தலுக்கு வரவேற்பு

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இதுகுறித்து வெளியிட்டுள்ள எக்ஸ் வலைப்பதிவில் "2024-25 பொருளாதார ஆண்டறிக்கையில், குறிப்பிட்ட பொருளாதார வளர்ச்சியை எட்ட, முதலீட்டு மூலதனத்தை ஊக்கப்படுத்தவும், உள்நாட்டு நுகர்வை அதிகரிக்க வேண்டிய அவசியம் பற்றியும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஏழைகள், பெண்கள், விவசாயிகள், இளைஞர்கள் ஆகியவர்களை மையமாக கொண்டு 2025-26 நிதிநிலை அறிக்கையில் திட்டங்கள் இடம் பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிதி நிலை அறிக்கையில் வருமான வரி விலக்கு கணிசமாக உயர்த்தப்பட்டது வரவேற்கத்தக்க அம்சமாகும். உள்நாட்டு உற்பத்தியை ஊக்கப்படுத்த அடிப்படை சுங்கவரிகளில் சில மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதும் வரவேற்கத்தக்கது.

AIADMK

தமிழ்நாடு திட்டங்கள் இல்லை

பீகார் மாநிலத்திற்கு விரைவில் தேர்தல் வருவதை கருத்தில் கொண்டு அம்மாநிலத்திற்கு மட்டும் பல வளர்ச்சி திட்டங்களை அறிவித்துள்ளதால், மத்திய அரசின் நிதி நிலை அறிக்கை என கூறுவதை விட, பீகார் மாநில வரவு - செலவு நிதிநிலை அறிக்கை என கருதும்படி அமைந்துள்ளது. தமிழ்நாடு போன்ற மாநிலத்திற்கு எந்தவிதமான சிறப்பு திட்டங்களும் இல்லை. விவசாயத்துறையை பொருத்தவரை 100 மாவட்டங்களுக்கு சிறப்பு திட்டங்கள் உள்பட சில திட்டங்களை அறிவித்துள்ளார்கள். இந்த திட்டங்களில் விவசாயிகளுக்கு உற்பத்தியை பெருக்கவும், இடுபொருள் விலையை கட்டுப்படுத்தவும், விளைப்பொருட்களை நியாயமான விலையில் விற்பனை செய்யவும், அதன் மூலம் விவசாயிகளின் வருமானத்தை பெருக்கவும் தமிழ்நாட்டிற்கு எவ்வாறு உதவும் என்பதை பொருத்திருந்து பார்க்க வேண்டும்.

மெட்ரோ இரயில் திட்டம் எங்கே?

தமிழ்நாடு மாநிலம் நீர் பற்றாக்குறை மாநிலமாகும். விவசாய வளத்தை பெருக்கவும், விரையமாகும் நீரை பயன்படுத்த உதவும் நதி நீர் இணைப்பு திட்டங்கள் குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. அதேபோல் சிறு குறு தொழில்களுக்கும், ஏற்றுமதிக்கும் சில அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்குவும், திறன் மேம்பாட்டு பயிற்சியுடன் புதிய வேகத்தை கொடுக்கவும் திட்டங்கள் ஏதும் இல்லை. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரயில்வே திட்டங்கள் மற்றும் கோவை, மதுரை ஆகிய நகரங்களின் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு எவ்வித அறிவிப்பும் நிதி நிலை அறிக்கையில் இல்லாதது தமிழ்நாட்டிற்கு ஏமாற்றம் அளிக்கிறது.

மாயாஜால அறிக்கை

10 ஆண்டுகளுக்கு மேல் 8 சதவீதத்திற்கு குறையாத பொருளாதார வளர்ச்சியை அடைந்தால்தான் 2047-ல் வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற இலக்கை அடைய முடியும் என பொருளாதார அறிக்கை கூறுகிறது. இந்நிதி நிலை அறிக்கையில் தனிநபர் வருமான வரம்பை மட்டும் உயர்த்தியுள்ளதால், இது ஒரு மாயாஜல அறிக்கையாக, வார்த்தை ஜாலங்கள் நிறைந்த அறிக்கையாக தோன்றுகிறது. பொருளாதார வளர்ச்சி ஆண்டுக்கு 8% எப்படி உயர்த்தப்படும் என்பது ஒரு பெரிய கேள்விக்குறியாகவே உள்ளது." என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: #Breaking: கனிமவளக்கொள்ளையை எதிர்த்தவர் கொலை செய்யப்பட்ட விவகாரம்; களமிறங்குகிறது சிபிசிஐடி.. அதிரடி உத்தரவு.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#AIADMK #edappadi palanisamy #tamilnadu #politics #budget 2025 #பட்ஜெட் 2025
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story