×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அடக்கொடுமையே!! 2வது பிரசவத்திற்கு மனைவியை அனுப்பிவிட்டு அடுத்த குழந்தைக்கு தயாரான கணவர்... சிறுமியை கர்ப்பமாக்கிய விவகாரம்..!

அடக்கொடுமையே!! 2வது பிரசவத்திற்கு மனைவியை அனுப்பிவிட்டு அடுத்த குழந்தைக்கு தயாரான கணவர்... சிறுமியை கர்ப்பமாக்கிய விவகாரம்..!

Advertisement

ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் அருகே ஹம்சா நகர் குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் சலீம். இவர் அப்பகுதியில் பெயிண்டராக வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ள நிலையில் இரண்டாவது பிரசவத்திற்காக மனைவி அவரது அம்மா வீட்டிற்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் சலீம் பாஷாவின் உறவினர்கள் அவருக்கு தேவையான உணவை 14 வயது சிறுமி ஒருவரிடம் கொடுத்து அனுப்பியுள்ளனர். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட சலீம் பாஷா சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் இத்தனை யாரிடம் கூறக்கூடாது என்று அந்த சிறுமியை சலீம் மிரட்டியுள்ளார்.

இதனையடுத்து சிறுமிக்கு அதிக வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் சிறுமியின் பெற்றோர் அவரை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளனர். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சிறுமியிடம் விசாரிக்கவே சிறுமி நடந்துவற்றை கூறியுள்ளார்.

 இதனைத்தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளிக்கவே புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார் சலீம் பாஷாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Sexual Harrasment #arrested #Investigation
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story