×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மழைக்கு ஒதுங்கிய போது நேர்ந்த விபரீதம்.! தூக்கி வீசப்பட்டு உயிரிழந்த வழக்கறிஞர்.! துயர சம்பவம்!!

மழைக்கு ஒதுங்கிய போது நேர்ந்த விபரீதம்.! தூக்கி வீசப்பட்டு உயிரிழந்த வழக்கறிஞர்.! துயர சம்பவம்!!

Advertisement

சென்னை கொரட்டூர் பாடி யாதவா தெருவில் வசித்து வந்தவர் சம்பத்குமார். 57 வயது நிறைந்த அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வந்துள்ளார். மேலும் இவர் திமுக முன்னாள் மாமன்ற உறுப்பினரும் ஆவார். வழக்கறிஞர் சம்பத்குமார் நாள்தோறும் கொரட்டூர் ஜம்புகேஸ்வரர் நகர் பகுதியில் அமைந்துள்ள சிவன் கோயிலைச் சுற்றி நடைபயணம் மேற்கொள்வது வழக்கம். 

அவ்வாறு இன்றும் அவர் நடைப்பயிற்சி மேற்கொண்ட போது, திடீரென மழை பெய்ததால் அவர் கோயிலின் அருகேயுள்ள கம்பெனி வாசலில் ஒதுங்கியுள்ளார். அப்பொழுது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி சம்பத்குமார் தூக்கி வீசப்பட்டார்.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் அவரை உடனே மீட்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனை ஒன்றிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். பின்னர் போலீசார் அங்கு விரைந்து சம்பத் குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#dead #rain #electricity
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story