அதிமுக பொதுச் செயலாளர் பதவி செல்லாது.! சசிகலா வழக்கை ரத்து செய்ய கோரி மனு.!
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக பொதுச்செயலாளராக சசிகலாவும், துணை பொதுச் செயலாளராக டிடிவி த
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக பொதுச்செயலாளராக சசிகலாவும், துணை பொதுச் செயலாளராக டிடிவி தினகரனும் தேர்வு செய்யப்பட்டது செல்லாது என கடந்த 2017 செப்டம்பரில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முதல்வராக சட்டப்பேரவை உறுப்பினர்களால் தேர்வான நிலையில் சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு செல்லும் சூழ்நிலை ஏற்பட்டது.
இதனையடுத்து எடப்பாடி பழனிசாமியை முதல்வராக நியமித்துவிட்டு சசிகலா சிறைக்குச் சென்றார். சசிகலா சிறை சென்ற பிறகு ஓபிஎஸ் அணி மீண்டும் அதிமுகவில் இணைக்கப்பட்டது. இதனையடுத்து நடந்த அதிமுக பொதுக்குழுவில், அதிமுக நிர்வாகிகளாக சசிகலா தினகரன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362