×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ரூ.50 ஆயிரம் கொடுத்து 3 சின்ன பசங்க என்னை படுக்க கூப்பிட்டாங்க - நடிகை ஷர்மிளா பேட்டி.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

ரூ.50 ஆயிரம் கொடுத்து 3 சின்ன பசங்க என்னை படுக்க கூப்பிட்டாங்க - நடிகை ஷர்மிளா பேட்டி.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

Advertisement

பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லை விவகாரங்களில், திரைத்துறையில் நடக்கும் அப்பட்டமான பாலியல் வன்முறை தாக்குதல்கள் வேரோடு ஒழிக்கப்படவேண்டியவை.

திரையுலகை பொறுத்தவரையில் படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டு வரும் நடிகைகளிடம், அவர்களை பகிரங்கமாக படுக்கை பகிரகேட்கும் கலாச்சாரம் இருந்து வருவதாக தொடர் புகார்கள் எழுந்து வருகிறது.

சில நடிகைகளும் அவ்வப்போது தங்களின் வாழ்க்கையில் சந்தித்த அந்த தருணங்களையும் பதிவு செய்து வருகின்றனர். இது மிகப்பெரிய நடிகைகளால் கூறப்படுகிறது என்றாலும், சிறிய அளவிலான நடிகைகள், துணை நடிகைகள் உட்பட பலராலும் இது குறித்த தகவல் வெளிப்படையாக சொல்லப்படுவது இல்லை. 

இந்த நிலையில், தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாகி, தற்போது அம்மா வேடத்தில் நடித்து வரும் நடிகை ஷர்மிளா, தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லை தொடர்பாக பேட்டி அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இது குறித்த அவர் கூறுகையில், "கேரளாவை சேர்ந்த இளைஞர்களுக்கு 25 வயதாகும். அந்த மூன்று இளைஞர்கள் சேர்ந்து ஒரு படத்தை தயாரித்தனர். எனக்கு அம்மா கதாபாத்திரம் இருப்பதாக கூறி படப்பிடிப்பிற்காக கேரளாவுக்கு அழைத்தனர். 

சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில், முதலில் மரியாதையாக பேசியவர்கள் சம்பவத்தன்று எனது அறைக்கு வந்து ரூ.50 ஆயிரம் பணம் கொடுத்து, 3 பேரில் ஒருவரை தேர்ந்தெடுத்து அவர்களோடு படுக்கையை பகிர கூறினார்கள். 

நான் எதுவும் பேசாமல் அவர்களை வெளியே அனுப்பி வைத்துவிட்டு, நண்பர்களின் உதவியுடன் அங்கிருந்து தப்பித்து வந்துவிட்டேன்" என்று கூறினார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#தமிழ் சினிமா #tamil cinema #Latest news #Actress sharmila #நடிகை சர்மிளா #cinema news #சினிமா செய்திகள்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story