நான் பிறந்த பத்து மாதத்தில் என் தந்தையை இழந்தேன்.! தற்போது எனது ஞானத்தந்தையை இழந்துள்ளேன்.! நடிகர் சிவக்குமார் உருக்கமாக இரங்கல்.!
பிரபல எழுத்தாளர் கி.ரா. மறைவிற்கு நடிகர் சிவக்குமார் உருக்கமாக இரங்கல் தெரிவித்திருக்கிறார
பிரபல எழுத்தாளர் கி.ரா. மறைவிற்கு நடிகர் சிவக்குமார் உருக்கமாக இரங்கல் தெரிவித்திருக்கிறார்.
சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் கி.ரா என்கிற கி.ராஜநாராயணன் வயது மூப்பு காரணமாக இன்று உயிரிழந்தார். புதுச்சேரி பல்கல்கலைக்கழகத்தின் சிறப்பு பேராசிரியராக பணிபுரிந்தார் கி.ராஜநாராயணன். கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று கருதப்படும் இவர், கோபல்ல கிராமம், கோபல்ல கிராமத்து மக்கள், அந்தமான் நாயக்கர் ஆகிய நாவல்களை எழுதியிருக்கிறார். கோவில்பட்டியின் அருகில் உள்ள இடைசெவல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
மறைந்த கி.ரா.வின் உடல் புதுச்சேரி லாஸ்பேட்டை அரசு குடியிருப்பில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து, இன்று கருவடிக்குப்பம் சுடுகாட்டில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. சாகித்ய அகாடமி விருது, இலக்கிய சிந்தனை விருது, தமிழக அரசின் விருது, கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2016ம் ஆண்டுக்கான தமிழ் இலக்கியச் சாதனை விருது உள்ளிட்ட தமிழின் முக்கிய இலக்கிய விருதுகள் பெற்றுள்ளார்.
இந்நிலையில், பிரபல எழுத்தாளர் கி.ரா. மறைவிற்கு நடிகர் சிவக்குமார் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், நான் பிறந்த பத்து மாதத்தில் என் தந்தையை இழந்துவிட்டேன். தற்போது எனது ஞானத்தந்தை இழந்துள்ளேன். எனக்கும், எழுத்தாளர் கி.ரா.வுக்கும் 35 வருட காலமாக உறவு உண்டு.
அந்த மகத்தான மனிதர் கரிசல் மண்ணை பற்றி எழுதிய கோபல்ல கிராமம், கோபல்ல கிராமத்து மக்கள், கரிசல் காட்டுக் கடுதாசி, வட்டார வழக்குச் சொல்லகராதி போன்ற அழியாத படைப்புகளில் என்றென்றும் இந்த மண்ணில் வாழ்ந்து கொண்டே இருப்பார். அவரது ஆத்மா சாந்தியடையட்டும் என கூறியுள்ளார்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362