17 வயது சிறுமியை கர்ப்பம் ஆக்கிய இளைஞர்... போலீசுக்கு பயந்து தற்கொலை..!!
17 வயது சிறுமியை கர்ப்பம் ஆக்கிய இளைஞர்... போலீசுக்கு பயந்து தற்கொலை..!!
மாணவியை கர்ப்பமாக்கிய இளைஞர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம்.
திருவாரூர் மாவட்டதில் உள்ள மூவாநல்லூர் கிராமத்தில் வசிப்பவர் பாபு (எ) சுரேஷ் (32). இவர் ஒரு நெல் வியாபாரி. சுரேஷ் 17 வயதுடைய பள்ளி மாணவியை காதலிப்பதாக ஆசைவார்த்தை பேசி நெருங்கி பழகியதில் அந்த மாணவி கர்ப்பமானார். இது தெரிந்த மாணவியின் தாய் அவரது மகளை கண்டித்தார்.
இதனால் விரக்தி அடைந்த அந்த பெண் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார். இதை பார்த்த அவரது பெற்றோர் அவரை சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இது தொடர்பாக மன்னார்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய காவல்துறையினர், போக்சோ சட்டத்தில் சுரேஷ் மீது வழக்குபதிவு செய்து அவரை தேடி வந்தனர். இந்நிலையில் சுரேஷ் தூத்துக்குடியில் உள்ள தங்கும் விடுதியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362