×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இருசக்கர வாகனத்தின் மீது டிராக்டர் மோதி சம்பவ இடத்திலேயே வாலிபர் மரணம்..!

இருசக்கர வாகனத்தின் மீது டிராக்டர் மோதி சம்பவ இடத்திலேயே வாலிபர் மரணம்..!

Advertisement

நாகை மாவட்டம் திருமருகல் அருகே உள்ள ஆதினங்குடியைச் சேர்ந்த சதாசிவம் மகன் ஹரிஹரன் (20). இவர் தனது இருசக்கர வாகனத்தில் ஆதினங்குடியிலிருந்து வவ்வாலடிக்கு சென்றுள்ளார். 

அப்போது தெற்குலேரி அருகே எதிரே வந்த டிராக்டர் ஹரிஹரன் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் ஹரிஹரன் இருசக்கர வாகன த்தில் இருந்து கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த ஹரிஹரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்த தகவல் அறிந்த திருக்கண்ணபுரம் காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து ஹரிஹரனின் உடலை கைப்பற்றி நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து டிராக்டர் ஓட்டுனரை தேடி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Naga Distri8ct #Motor cycle #tractor #Collision #Youth killed
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story