×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சிக்னல் கிடைக்காததால் உயரமான கட்டிடத்தில் அமர்ந்து கேம் விளையாடிய வாலிபர்.! கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த துயரம்.!

ஈரோடு மாவட்டத்தில் சிக்னல் கிடைக்காததால் உயரமான கட்டிடத்தில் அமர்ந்து செல்போனில் கேம் விளையாடிய வாலிபர் தவறி விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

ஈரோடு மாவட்டம் எழுமாத்தூரில் ஒரு தனியார்  ஆலை ஒன்று இயங்கி வருகிறது. அந்த ஆலையில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பிகாஸ்திகா என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் வழக்கம்போல் நேற்று மாலை வேலை முடிந்ததும் வீட்டிற்கு வந்து செல்போனில் ப்ரீபையர் கேம் விளையாடி வந்துள்ளார்.

அப்போது வீட்டிற்குள் சிக்னல் கிடைக்காததால் வீட்டின் அருகே உள்ள கொய்யா மரத்தில் ஏறி ஆஸ்பெட்டாஸ் கூரையில் நடந்து சென்று உயரமான கட்டிடத்தில் அமர்ந்து விளையாடி கொண்டிருந்தார். இதனையடுத்து பொழுது சாய்ந்ததால் இரவு 7 மணியளில் கீழே இறங்க முயன்றுள்ளார். அப்போது தவறி கீழே விழுந்து பலத்த காயம் ஏற்பட்டதுள்ளது.

இதனைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். செல்போனில் கேம் விளையாடிய வாலிபர் தவறி விழுந்து பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#died #young boy
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story