×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தங்கை என்று தெரிந்தே கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த காமுகன்: போக்சோ சட்டத்தின் கீழ் கைது..!

தங்கை என்று தெரிந்தே கடத்தி பாலியல் வங்கொடுமை செய்த காமுகன்: போக்சோ சட்டத்தின் கீழ் கைது..!

Advertisement

14 வயது சிறுமியை கடத்திச்சென்று பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருச்சி அருகேயுள்ள கல்லுக்குழி பகுதியை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்தார்.  இவரது உறவினர் கரூரை சேர்ந்த மகேந்திரன். இவர் திருச்சி மத்திய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள ஒரு டீ-கடையில் கேஷியராக பணிபுரிந்து வந்தார்.

இதற்கிடையே, அண்ணன் முறையிலான மகேந்திரனுடன், மாணவி பழகி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 14 ஆம் தேதி மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்றுள்ளார். மகள் காணாமல் போனதையறிந்து அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் அவர்களை தேடியுள்ளனர்.

இந்த நிலையில், மகள் காணாமல் போனது குறித்து திருச்சி கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இருவரையும் தேடி வந்தனர். அப்போது, மகேந்திரன், சிறுமியுடன் மணப்பாறை பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருப்பது தெரியவந்தது. 

இதனை அடுத்து, இருவரையும் மீட்டு காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டதில், மகேந்திரன் சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்தது.

இதனையடுத்து, மகேந்திரன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறயினர் அவரை கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#sexual abuse #trichy #Cantonment Police Station #Pocso Act #police arrest
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story