×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

திருமணமாகி இவ்வளவு நாட்களாகியும் குழந்தை இல்லாத ஏமாற்றத்தால் விரத்தி அடைந்த வாலிபர்... எடுத்த விபரீத முடிவு..!

திருமணமாகி இவ்வளவு நாட்களாகியும் குழந்தை இல்லாத ஏமாற்றத்தால் விரத்தி அடைந்த வாலிபர்... எடுத்த விபரீத முடிவு..!

Advertisement

திருமணமாகி 5 ஆண்டுகளாக குழந்தை இல்லாத விரக்தியில் 35 வயது ஆண் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்டார். 

மராட்டிய மாநிலத்தில், மும்பை மாவட்டம், குல்ரா நகரம் குரேஷி நகரில் வாழ்ந்து வருபவர் மஸ்ஹர் அலி அன்சாரி (35). இவருக்கு கடந்த 2017-ஆம் வருடம் திருமணம் நடந்தது. திருமணமாகி ஐந்து வருடங்கள் ஆகியும் அன்சாரிக்கு இதுவரை குழந்தை பிறக்கவில்லை. இதனால் அவர் எப்பொழுதும் கவலையில் இருந்துள்ளார். 

இந்நிலையில், குழந்தை பிறக்காததால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த அன்சாரி திங்கட்கிழமை இரவு வீட்டில் இருந்த எலி மருந்தை சாப்பிட்டுள்ளார். எலி மருந்து சாப்பிட்ட அன்சாரி உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அன்சாரி புதன்கிழமை உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#India #Mumbai #Child even after being married #depressed #young man
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story