×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இரவு நேரத்தில் சைக்கிளில் சென்ற மாணவி.. பீகாரைச் சேர்ந்த நபர் செய்த காரியத்தால் அதிர்ச்சி..!

இரவு நேரத்தில் சைக்கிளில் சென்ற மாணவி.. பீகாரைச் சேர்ந்த நபர் செய்த காரியத்தால் அதிர்ச்சி..!

Advertisement

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சந்தன் குமார் என்ற நபர், ஐ.ஐ.டி வளாகத்தில் மாணவியிடம் பாலியல் தொல்லை கொடுக்க முயன்றுள்ளார். 

சென்னை, கடந்த ஜூலை 15 -ஆம் தேதி இரவு, ஐ.ஐ.டி வளாகத்தில் அங்கு பயிலும் மாணவி ஒருவர் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார் அப்போது அந்த மாணவியை வழிமறித்து ஒருவர் பாலியல் தொல்லை கொடுக்க முயன்றுள்ளார். அந்த நபரிடமிருந்து தப்பிச் சென்ற மாணவி, இது பற்றி தனது நண்பரிடம் கூறியுள்ளார். சுமார் 20 வயது மதிக்கத்தக்க நபர் தன்னிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்ததாக கூறிய மாணவி, இது பற்றி சமூக வலைதளத்தில் பதிவிட்டார். 

இதன் பிறகு ஐ.ஐ.டி. நிர்வாகம் விசாரணைக் குழு அமைத்து இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தியது. ஐ.ஐ.டி. வளாகத்தில் வேலை செய்யும் ஒப்பந்த பணியாளர்கள், இரவு வேலையில் இருந்தவர்கள் உட்பட அனைவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையில், ஐ.ஐ.டி. வளாகத்தில் கடை வைத்து நடத்தி வரும்  சந்தன் குமார் என்ற பீகார் மாநிலத்தை சேர்ந்த நபர் தான் மாணவியிடம் பாலியல் தொல்லை கொடுக்க முயன்றது என்று தெரிய வந்தது. 

இதைத்தொடர்ந்து அவரை நேற்று காலை கோட்டூர்புரம் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 354 மற்றும் பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் பிரிவு 4 ஆகிய இரு பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tamil nadu #chennai #student #sexually harassed #Man from bihar
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story