×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

விருத்தாச்சலம் அருகே அரசு பள்ளி மாணவர் ஒருவர்; விஷம் குடித்ததால் பரபரப்பு..!

விருத்தாச்சலம் அருகே அரசு பள்ளி மாணவர் ஒருவர்; விஷம் குடித்ததால் பரபரப்பு..!

Advertisement

விருத்தாசலம் அருகே அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவருக்கு ஹாஸ்பிடல் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கடலூர் விருத்தாசலம், அடுத்த எம்.பரூர் கிராமத்தில் வசித்து வருபவர் கொளஞ்சி. கூலி தொழிலாளி. இவருடைய மகன் ஜெயக்குமார் (17). இவர் அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று வழக்கம்போல் ஜெயக்குமார் பள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது பள்ளியில் உள்ள ஆசிரியர் ஒருவர், ஏன் சரியாக முடிவெட்டவில்லை எனக்கேட்டு அவரை பள்ளியின் வெளியில் நிற்க வைத்துள்ளார். 

இதனால் மனமுடைந்த மாணவர் ஜெயக்குமார் பள்ளியின் வெளியே நின்று கொண்டிருந்தார். அப்போது ஜெயக்குமார், அருகில் உள்ள கடைக்கு சென்று, விஷ மருந்தை வாங்கி வந்து பள்ளிக்கூடத்தின் வெளியே வைத்து குடித்துள்ளார். இதனால் மயங்கிய மாணவர்ஜெயக்குமாரை ஆசிரியர்கள் சிகிச்சைக்காக மங்கலம்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஜெயக்குமாருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பிறகு அவர் மேல்சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை‌ அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு ஜெயக்குமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மங்கலம்பேட்டை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வரும்மாணவர் ஒருவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Vridthachalam #government school #plus-2-student #poisoned-in-school
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story