ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட மாணவி: உருக்கமான கடிதத்தை கைப்பற்றிய போலீசார்..!
ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட மாணவி: உருக்கமான கடிதத்தை கைப்பற்றிய போலீசார்..!
செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப்பெருமாள் கோவில் அருகேயுள்ள திருக்கச்சூர் பகுதி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் மாரிமுத்து. இவர் கூலி தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவரது மகள் நிரோஷா (20). இவர் பொத்தேரியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி நர்சிங் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.
இவரை, மாரிமுத்து தினந்தோறும் திருக்கச்சூரில் உள்ள தனது வீட்டில் இருந்து சிங்கப்பெருமாள் கோவில் ரயில் நிலையம் வரை தனது டூ-வீலரில் அழைத்துச் சென்று ரயில் நிலையத்தில் விடுவது வழக்கம். மாணவி நிரோஷா அங்கிருந்து கல்லூரிக்கு மின்சார ரயிலில் கல்லூரிக்கு சென்று வந்துள்ளார். வழக்கம் போல் இன்று தனது மகளை ரயில் நிலையத்தில் விட்ட மாரிமுத்து, பின்பு வீட்டுக்கு சென்றுள்ளார்.
இந்த நிலையில், இன்று சிங்கப்பெருமாள் கோவில் ரயில் நிலையத்திற்கு வந்த நிரோஷா, யாரும் எதிர்பாராத நேரத்தில் திடீரென சென்னை கடற்கரை நோக்கிச் சென்ற விரைவு மின்சார ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த செங்கல்பட்டு ரயில்வே காவல்துறையினர், நிரோஷாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
நிரோஷாவின் பையில் தனது தற்கொலை குறித்து கடிதம் இருந்ததாக கூறப்படும் நிலையில் அதனை கைப்பற்றிய ரயில்வே காவல்துறையினர் தற்கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362