×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அரசு பள்ளி தரைத்தள தொட்டியில் தவறி விழுந்து பலியான தனியார் பள்ளி மாணவன்.. போலீஸ் விசாரணை..!

அரசு பள்ளி தரைத்தள தொட்டியில் தவறி விழுந்து பலியான தனியார் பள்ளி மாணவன்.. போலீஸ் விசாரணை..!

Advertisement


கோவை மாவட்டம் நாகராஜபுரம் அன்னை சத்யா நகரை சேர்ந்தவர் 6 வயது சிறுவன் குகன்ராஜ். இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் பயின்று வந்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியில் அரசு பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில் தரைத்தள தண்ணீர் தொட்டி திறந்து வைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

அப்போது அந்த அரசு பள்ளி வளாகத்தில் விளையாடிக்கொண்டிருந்த குகன்ராஜ் தவறி தண்ணீர் தொட்டிக்குள் விழுந்ததால் மூச்சு திணறி பரிதாபமாக பலியானார். இதனையடுத்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் குகன்ராஜின் உடலை மீட்டு அவரது வீட்டிற்கு கொண்டு சென்றனர்.

பின்னர் இந்த சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் அங்கு விரைந்து வந்த காவல்துறையினர் சிறுவன் குகன்ராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Student Died #Falling floor tank #Investigation
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story