×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பட்டப் பகலில் கோவை நீதிமன்ற வளாகத்தில் ஒருவர் வெட்டி கொலை... பயங்கர சம்பவம்...!

பட்டப் பகலில் கோவை நீதிமன்ற வளாகத்தில் ஒருவர் வெட்டி கொலை... பயங்கர சம்பவம்...!

Advertisement

ஐந்து பேர் கொண்ட கும்பல் கோவை நீதிமன்ற வளாகத்தில், இருவர் மீது பயங்கர ஆயுதங்களுடன் கொலை வெறி தாக்குதல் நடத்தியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். 

கோவை நீதிமன்ற வளாகத்திற்கு இரண்டு பேர் வாய்தாவுக்காக வந்துள்ளனர். அப்போது நீதிமன்றத்தின் பின்புறம் உள்ள நுழைவு வாயில் அருகே பயங்கர ஆயுதங்களுடன் வந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் நடுரோட்டில் இருவரையும் ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டியது. 

இதில், ரத்த வெள்ளத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயங்களுடன் மற்றொருவர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதனை தொடர்ந்து, அந்த கும்பல் பைக்கில் அங்கிருந்து வேகமாக தப்பியது.

நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பில் இருந்த காவல்துறையினர் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவரின் உடலை உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தாக்குதலுக்கு உள்ளானவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டதில் கொலை செய்யப்பட்டவர் கீரணத்தம் பகுதியைச் சேர்ந்த கோகுல் என்பதும், படுகாயமடைந்தவர் சிவானந்தா காலணியை சேர்ந்த மனோஜ் என்பதும் தெரியவந்தது. எதற்காக‌ தாக்குதல் நடத்தப்பட்டது என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. 

நீதிமன்ற வளாகதத்தில் கொலையை பார்த  பொதுமக்கள் அலயடித்து ஓடினார். நீதிமன்ற வளாகத்தில் கொலை நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐந்து பேர் கொண்ட கும்பல் நடுரோட்டில் ஓட ஓட வெட்டிய சிசிடிவி காட்சிகள் தற்பொழுது வெளியாகி உள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tamil nadu #Coimbatore #court complex #A person was hacked to death #Murder
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story