ஆள் நடமாட்டம் இல்லாத சாலையில் கண்டெடுக்கப்பட்ட சிதைந்த உடல்... காவல்துறை தீவிர விசாரணை.!
ஆள் நடமாட்டம் இல்லாத சாலையில் கண்டெடுக்கப்பட்ட சிதைந்த உடல்... காவல்துறை கொலையாளிகளை தேடி தீவிர விசாரணை.!
தூத்துக்குடி மாவட்டத்தில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் முகம் சிதைக்கப்பட்டு மீட்கப்பட்ட சடலத்தால் அதிர்ச்சியும் பரபரப்பும் ஏற்பட்டிருக்கிறது. இது தொடர்பாக கொலையாளிகளை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி சங்கராபேரியிலிருந்து ஜோதி நகர் செல்லும் வழியில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக சிப்காட் காவல் துறையினருக்கு தகவல் வந்தது. இதனைத் தொடர்ந்து அங்கு சென்ற காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.