கொடூரத்தின் உச்சம்... பைக்கில் சென்ற நபரை விரட்டிச் சென்று சாய்த்த கும்பல்... காவல்துறை தீவிர தேடுதல் வேட்டை.!
கொடூரத்தின் உச்சம்... பைக்கில் சென்ற நபரை விரட்டிச் சென்று சாய்த்த கும்பல்... காவல்துறை தீவிர தேடுதல் வேட்டை.!
திண்டுக்கல் மாவட்டத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் முத்தழகு பட்டியை சேர்ந்த ஆரோக்கியசாமி என்பவரது மகன் அருளானந்தபாபு (29). இவருக்கு சக்திவேல், தட்சிணாமூர்த்தி என்ற இரண்டு நண்பர்கள் இருந்தனர். இவர்கள் இருவரும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அடுத்தடுத்து படுகொலை செய்யப்பட்டனர்.