×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அடக்கடவுளே மறுபடியுமா !! வங்கக்கடலில் உருவானது குறைந்து காற்றழுத்த தாழ்வு பகுதி..! சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு...

மறுபடியுமா.....? வங்கக்கடலில் உருவானது குறைந்து காற்றழுத்த தாழ்வு பகுதி.….!

Advertisement

வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து பேசிய சென்னை வானிலை ஆய்வு மையத்  தலைவர் பாலச்சந்திரன் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் சற்று வலுப்பெற உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது சற்று வலுப்பெற்று வட மேற்கு திசையில் தமிழகம் மற்றும் புதுவையை நோக்கி நகரக்கூடும் என்று தெரிவித்தார்.இதன் காரணமாக இன்றும, நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளார்.


சென்னையை பொறுத்தவரையில் வருகின்ற 11 மற்றும் 12-ம் தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது. ஆனால் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது புயலாக வலுவடைய வாய்ப்பில்லை என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tamilnadu #cyclone #rain
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story