அடக்கடவுளே மறுபடியுமா !! வங்கக்கடலில் உருவானது குறைந்து காற்றழுத்த தாழ்வு பகுதி..! சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு...
மறுபடியுமா.....? வங்கக்கடலில் உருவானது குறைந்து காற்றழுத்த தாழ்வு பகுதி.….!
வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து பேசிய சென்னை வானிலை ஆய்வு மையத் தலைவர் பாலச்சந்திரன் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் சற்று வலுப்பெற உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது சற்று வலுப்பெற்று வட மேற்கு திசையில் தமிழகம் மற்றும் புதுவையை நோக்கி நகரக்கூடும் என்று தெரிவித்தார்.இதன் காரணமாக இன்றும, நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளார்.
சென்னையை பொறுத்தவரையில் வருகின்ற 11 மற்றும் 12-ம் தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆனால் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது புயலாக வலுவடைய வாய்ப்பில்லை என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362