×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

விவாகரத்து கேட்ட காதல் மனைவி: கணவன் செய்த காரியத்தால் பரிதவிக்கும் குழந்தைகள்..!

விவாகரத்து கேட்ட காதல் மனைவி: கணவன் செய்த காரியத்தால் பரிதவிக்கும் குழந்தைகள்..!

Advertisement

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகேயுள்ள பள்ளவிளை கிராமத்தை சேர்ந்தவர் அனந்த நாடார். இவரது மகள் பத்மா. இவர் பரமார்த்தலிங்கபுரம் பகுதியை சேர்ந்த ஆண்டனி என்பவரை காதலித்து வந்துள்ளார். இதற்கிடையே இவர்கள் இருவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த காதல் தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில், தம்பதியினருக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி தகராறு நடந்து வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து விவாகரத்து வழங்க கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இருந்த போதும் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். தினந்தோறும் காலை தனது மகள் பத்மா வீட்டிற்கு வரும் அனந்த நாடார், தனது பேரக்குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து செல்வது வழக்கம்.

இன்று காலை வழக்கம்போல் கிளம்பிய அவருக்கு,  பத்மா வீட்டில் மயங்கி கிடப்பதாக அக்கம்பக்கத்தோர் தகவல் அளித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்து தனது மகள் வீட்டிற்கு விரைந்து சென்ற அனந்த நாடார், அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பத்மா ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

தனது மகள் உயிரிழப்பிற்கு மருமகன் ஆண்டனி தான் காரணம் என்று வடசேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதற்கிடையே தனது மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்ததாக கூறி வடசேரி காவல் நிலையத்தில் ஆண்டனி சரணடைந்துள்ளார். இதனையடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Kanyakumari District #Nagarcoil #Murder #Husband Surrender #Vadacherry Police
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story