×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஏலம் போட்டு தமிழ்நாட்டை விற்பவர்களுக்கு விரைவில் பரிசு காத்திருக்கிறது.! கமல்ஹாசன்

ஏலம் போட்டு தமிழ்நாட்டை விற்பவர்களுக்கும் விரைவில் ‘பரிசு’ காத்திருக்கிறது என கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

ஏல கோட்பாட்டின் மேம்பாடு, ஏலத்துக்கான வடிவமைப்பு ஆகியவற்றை உருவாக்கியதற்காக கடந்த திங்கள் கிழமையன்று பால் ஆர். மில்கிரோம் மற்றும் ராபர்ட் பி. வில்சன் ஆகிய இருவருக்கும் நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அவர்கள் இருவருக்கும் உலகம் முழுவதும் இருந்து பாரட்டுக்கள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “ஏலமிடும் முறையை ஆய்வு செய்த இரு அமெரிக்க அறிஞர் பெருமக்களுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஏலம் போட்டு தமிழ்நாட்டை விற்பவர்களுக்கும் விரைவில் ‘பரிசு’ காத்திருக்கிறது. நாளை நமதே!” எனக் குறிப்பிட்டுள்ளார்.
 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#kamalhasan
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story