×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

76 சவரன் தங்க நகை, 20 இருசக்கர வாகனம்... நகை அடகு கடையில் கைவரிசையை காட்டிய ஆட்டையை போட்ட கும்பல்..! பின்பு நடந்த அதிரடி சம்பவம்!!

நகை அடகு கடையில் கைவரிசை காட்டிய கொள்ளை கும்பல்..! பின்பு நடந்த அதிரடி சம்பவம்!!

Advertisement

பெரியங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவர் ஆம்பூர் அருகே நகை அடகு கடை ஒன்றை நடத்தி வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இவரது நகை அடகு கடையில் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையர்கள் கொள்ளை அடித்து சென்றுள்ளனர்.

அங்கு கொள்ளையடிக்கப்பட்ட நகையின் மதிப்பு 50 லட்சம் ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது. இது குறித்து போலீசாருக்கு தகவல் கிடைக்கவே தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் வெங்கிலி பேருந்து நிலையம் அருகே சுற்றி திறிந்த சந்தேகத்திற்கு இடமான ஐந்து நபர்களைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் நகை கொள்ளை சம்பவத்தில் இவர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. 

மேலும் அவர்களிடமிருந்து 76 சவரன் தங்க நகைகள் மற்றும் இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அந்த ஐந்து கொள்ளையர்களையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Jewellery pawn shop #Gang theft #arrest
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story