பிறந்து சில மணி நேரங்களே ஆன பெண் சிசுவை; கழிவுநீர் தொட்டியில் வீசி சென்ற பகீர் சம்பவம்...!
பிறந்து சில மணி நேரங்களே ஆன பெண் சிசுவை; கழிவுநீர் தொட்டியில் வீசி சென்ற பகீர் சம்பவம்...!
மதுரை அரசு ராஜாஜி ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள கழிவுநீர் தொட்டியில் வீசப்பட்டிருந்த பெண் சிசுவின் சடலத்தை காவல்துறையினர் சனிக்கிழமை மீட்டனர்.
மதுரை ராஜாஜி அரசு ஆஸ்பத்திரிக்கு தினமும் சிகிச்சைக்காக 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புற நோயாளிகள் வந்து செல்கின்றனர். மேலும் பிரசவ சிகிச்சை பிரிவில் தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட பிரசவங்கள் நடைபெறுகின்றன.
இந்நிலையில், இந்த ஆஸ்பத்திரியின் பிரசவ சிகிச்சை பிரிவு அருகே இருந்த கழிவு நீர் தொட்டியில், பிறந்து சில மணி நேரங்களே ஆன பெண் குழந்தை இறந்த நிலையில் கிடந்தது.
இது குறித்து காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அரசு ஆஸ்பத்திரி காவல் நிலைய காவல்துறையினர் அங்கு சென்று, கழிவுநீர் தொட்டியில் கிடந்த குழந்தையின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக மருத்துவமனை சுகாதார ஆய்வாளர் ராஜேந்திரன் அளித்த புகாரியின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், பெண் குழந்தையை வீசி சென்றவர்கள் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362