×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

SSLC-ல் கோட்டை விட்ட மகன்.. தந்தையாக போராடியும் பலன் கிடைக்காததால் தந்தை தற்கொலை.!

SSLC-ல் கோட்டை விட்ட மகன்.. தந்தையாக போராடியும் பலன் கிடைக்காததால் தந்தை தற்கொலை.!

Advertisement

மகன் பத்தாம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்ததால் மனமுடைந்த தந்தை தற்கொலை செய்துகொண்டார்.

ஈரோடு மாவட்டத்திலுள்ள அம்மாபேட்டை, கல்பாவி தொட்டிபாளையம் பகுதியைச் சார்ந்தவர் அப்புசாமி (வயது 45). இவரின் மனைவி சுமதி (வயது 38). அப்புசாமி சொந்தமாக ஆம்னி வேன் வைத்து ஓட்டி வருகிறார். 

தம்பதிகளுக்கு 15 வயதுடைய சஞ்சய் என்ற மகனும், 13 வயதுடைய சந்துரு என்ற மகனும் இருக்கின்றனர். இவர்களில் சஞ்சய் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வந்துள்ளார். 

மகிழம்பாடியில் உள்ள அரசு பள்ளியில் பயின்று வந்த சஞ்சய், மூன்று பாடத்தில் தோல்வியடைந்துள்ளார். அப்புசாமி மகனை எப்படியாவது படிக்க வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு, டுடோரியல் காலேஜில் சேர்த்து விட்டுள்ளார். 

ஆனால், சஞ்சயோ பள்ளிக்குச் செல்ல மறுத்து ஊர்ச்சுற்றி வந்துள்ளார். இதனால் அப்புசாமி மனமுடைந்து காணப்படவே, கடந்த ஒன்றாம் தேதி வீட்டில் பூச்சி மருந்து குடித்து அவர் மயங்கி கிடந்துள்ளார். 

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள், அவரை மீட்டு பவானி அரசு மருத்துவமனையில் அனுமதி செய்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஈரோடு கொண்டு செல்லப்பட்டவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விசயம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#erode #Ammapettai #tamilnadu #suicide #Sslc #death
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story