×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

குடிபோதையில் மகளை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய தந்தை... போக்சோ சட்டத்தில் கைது...!

குடிபோதையில் மகளை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய தந்தை... போக்சோ சட்டத்தில் கைது...!

Advertisement

திருவொற்றியூர் காமதேவன் நகரை சேர்ந்த  13 வயது சிறுமி  9 வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில மாதங்களாக மாதவிடாய் வராததால் சிறுமியின் தாய்  மருத்துவரிடம் அழைத்துச் சென்றார். உடலில் ரத்தம் குறைவாக இருப்பதால் காலதாமதமாக வரும் என மருத்துவர் கூறியுள்ளார்.

இதை தொடர்ந்து கடந்த சில நாட்களாக சிறுமியின் வயிறு பெரியதாக தொடங்கியது. எனவேவயிற்றில் கட்டி இருக்கலாம் என நினைத்த சிறுமியின் தாய் சிறுமியை ராஜீவ்காந்தி காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனைக்கு அழைத்து சென்று ஸ்கேன் எடுத்து வருமாறு கூறினர்.  

எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் ஸ்கேன் எடுத்து பார்த்ததில் சிறுமி  எட்டு மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது உடனே இதுகுறித்து மருத்துவமனையில் இருந்து மருத்துவர்கள் திருவொற்றியூர் காவல் நிலையத்தில் தகவல் அளித்தனர். திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், சிறுமியின் தந்தை சிறுமியிடம் குடிபோதையில் பலமுறை உடலுறவு கொண்டதால் சிறுமி கர்ப்பமாகியுள்ளார். சிறுமியின் தந்தை சிவலிங்கத்தை காவல் துறையினர் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Thiruvottiyur #chennai #Attempt Rape #Pregnancy #Father Arrested #Pocso Act
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story