×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இது சங்க காலம் இல்லை.! தற்காலம் தான்.! யானை கட்டி போரடித்த தமிழக விவசாயி.!

மதுரை மாவட்டம், அழகா்கோவில் அருகே உள்ள கிராமத்தைச் சோ்ந்த விவசாயி, அறுவடை செய்யப்

Advertisement

மதுரை மாவட்டம், அழகா்கோவில் அருகே உள்ள கிராமத்தைச் சோ்ந்த விவசாயி, அறுவடை செய்யப்பட்ட நெல்மணிகளை யானை கட்டி போரடித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சங்க காலத்தில் நெல் அறுவடையின் போது போரடிக்க யானையை பயன்படுத்தியது பற்றி வரலாற்றில் அறிந்திருப்போம். பின்னர் மாடுகளை வைத்து போரடித்தனர். ஆனால் தற்போது அறுவடைக்கு நவீன எந்திரங்கள் வந்ததால் கதிர்களில் இருந்து நெல்மணிகளை பிரித்தெடுக்க போரடித்தல் என்பது மறைந்து போனது. இந்தநிலையில், மதுரை மாவட்டம் மேலூர் அருகே வரலாற்றில் கூறுவதைப் போல, யானையை வைத்து வைக்கோல் போரடிக்கும் காட்சி வெளியாகி உள்ளது. 

அழகா்கோவில் அருகே உள்ள புலிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மதன். பொறியியல் பட்டதாரியான இவா், சென்னையில் தனியாா் நிறுவனத்தில் வேலை செய்துள்ளாா். பின்னா், அந்த வேலையை ராஜிநாமா செய்துவிட்டு, தனது சொந்த ஊரில் விவசாயம் செய்து வருகிறாா்.

மதன் வீட்டில், அரசு அனுமதியுடன் 40 வயது யானையை வளர்த்து வருகின்றனர். அவர் தனக்கு சொந்தமான வயலில் அறுவடை செய்த நெற்கதிர்களை தனியாக பிரித்த நிலையில், வைக்கோலை யானையை வைத்து போரடித்துள்ளார்.  விழா காலங்களில் யானையை வாடகைக்கு அழைத்துச் சென்ற அவர், தனது யானையை வைத்த வைக்கோல் போரடித்த காட்சி, தமிழர்களின் நெல் வளம் எவ்வாறு இருந்திருக்கும்? என பேச வைத்துள்ளது. 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#elephant #farmer
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story