பட்டப் பகலில் துணிகர கொலை... முன் விரோதமா.? வெட்டி சாய்க்கப்பட்ட நபர்.! வலை வீசி தேடும் காவல்துறை.!
பட்டப் பகலில் துணிகர கொலை... முன் விரோதமா.? வெட்டி சாய்க்கப்பட்ட நபர்.! வலை வீசி தேடும் காவல்துறை.!

திண்டுக்கல் அருகே நிலம் வாங்கியது தொடர்பாக ஏற்பட்ட முன் விரோதத்தில் நபர் ஒருவர் பட்டப் பகலில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
திண்டுக்கல் மாவட்டம் பொன்மான்துறை பகுதியை அடுத்த புதுப்பட்டியைச் சேர்ந்த ராசு என்கின்ற இருளப்பன் (40). இவருக்கு ஹேமலதா என்ற மனைவியும் இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். இருளப்பன் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது மூத்த மகளுக்கு திருமணம் முடிந்த நிலையில் மகன் கல்லூரியில் படித்து வருகிறார். இளைய மகள் பிளஸ் டூ படித்து வருகிறார்.