×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

காதலனை கரம் பிடித்த கல்லூரி மாணவி.. திடீர் மரணம்... போலீசார் விசாரணை..!

காதலனை கரம் பிடித்த கல்லூரி மாணவி.. திடீர் மரணம்... போலீசார் விசாரணை..!

Advertisement

கடலூர் மாவட்டம் புதுசத்திரம் பூவாலை பழைய தபால் நிலையத் தெருவை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகள் பரமேஸ்வரி புத்தூரில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் படித்து வந்த நிலையில் அதே கிராமத்தில் வசிக்கும் இளவரசன் என்பவரை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இதனையடுத்து திருமணத்திற்கு பிறகும் பரமேஸ்வரி தனது கல்லூரி படிப்பை தொடர்ந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவியிடையே குடும்பப் பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் சம்பவத்தன்று பரமேஸ்வரிக்கும் அவரது கணவர் இளவரசனுக்கும் தகராறு வந்துள்ளது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பரமேஸ்வரி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதனை கண்டு அதிர்ச்சடைந்த குடும்பத்தினர் பரமேஸ்வரியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் பரமேஸ்வரி அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து தனது மகள் பரமேஸ்வரியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது தந்தை முருகேசன் புதுச்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து பரமேஸ்வரியின் கணவரான இளவரசனை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#college student #Attempt sucide #Investigation
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story