×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பள்ளி வேன் சக்கரம் ஏறி இறங்கியதில் 3 வயது சிறுவன் தலைநசுங்கி மரணம் - கடலூரில் நெஞ்சை பதறவைக்கும் பயங்கரம்.!

பள்ளி வேன் சக்கரம் ஏறி இறங்கியதில் 3 வயது சிறுவன் தலைநசுங்கி மரணம் - கடலூரில் நெஞ்சை பதறவைக்கும் பயங்கரம்.!

Advertisement

சாலையோரம் விளையாடிய சிறுவன் திடீரென சாலைக்கு சென்றதால் பரிதாபமாக உயிர்போன துயரம் நடந்துள்ளது.

கடலூர் மாவட்டத்தில் உள்ள மேற்கு ராமாபுரம் பகுதியை சார்ந்தவர் சீனிவாசன். இவர் நெடுஞ்சாலைத்துறை ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி தீபா. 

தம்பதிகளுக்கு தேஜஸ்வரன் என்ற மூன்று வயது குழந்தை இருக்கிறான். இந்நிலையில், இன்று காலை சிறுவன் அங்குள்ள தாத்தா வீட்டில் விளையாடிக் கொண்டு இருந்தான். 

அப்போது, திடீரென சாலைக்கு வந்த சிறுவனின் மீது அவ்வழியே வந்த பள்ளி வாகனத்தின் சக்கரம் ஏறி-இறங்கியதில் சிறுவன் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான்.

இந்த விஷயம் தொடர்பாக திருப்பாதிபுலியூர் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்படவே, சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Cuddalore District #கடலூர் மாவட்டம் #3 years old boy #school van #Latest news #Death news
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story