உஷார் மக்களே உஷார்!.. ஒரே இரவில் மாறிய நிலைமை!. மீண்டும் அமலுக்கு வந்தது 2 வார கால முழு ஊரடங்கு..!
உஷார் மக்களே உஷார்!.. மீண்டும் அமலுக்கு வந்தது 2 வார கால முழு ஊரடங்கு..!
கொரோனா பெருந்தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளதால் தென்காசி மாவட்டம் முழுவதும் இன்று ( 19.08.2022) காலை 6 மணி முதல் செப்டம்பர் மாதம் 2 ஆம் தேதி மாலை 6 மணி வரை முழு ஊரங்கு உத்தரவு அமல்படுத்தப்படுவதாக தெங்காசி மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் அறிவித்துள்ளார்.
144 தடை உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது குறித்து தென்காசி மாவட்ட ஆட்சி தலைவர் ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:-
தென்காசி மாவட்டம் சிவகிரி தாலுகா பச்சேரி கிராமத்தில் 20 ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெற உள்ள ஒண்டிவீரன் 251 வது வீரவணக்க நாள் நிகழ்ச்சி மற்றும் செப்டம்பர் 1 ஆம் தேதி நெற்கட்டும்செவல் கிராமத்தில் நடைபெறும் மாவீரன் பூலித்தேவன் பிறந்தநாள் நிகழ்ச்சியில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்த தென்காசி மாவட்டம் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் மற்றும் சமுதாய அமைப்புகளை சேர்ந்தவர்கள் வந்து கலந்து கொள்வார்கள்.
கொரோனா நோய்த் தொற்றின் காரணமாக தென்காசி மாவட்டம் முழுவதும் 19 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 6 மணி முதல் செப்டம்பர் 2 ஆம் தேதி மாலை 6 மணி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும். எனவே பொதுமக்கள் அனைவரும் கூட்டமாக செல்லாமல் சமூக இடைவெளியுடன் நான்கு நபர்கள் வீதம் சென்று மரியாதை செலுத்திட முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362