×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வாலிபர் கொலை வழக்கில் 9 பேர் கைது.!

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே நெம்மக்கோட்டை பகுதியை சேர்ந்த துப்பாக்கி முருகன் என்

Advertisement

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே நெம்மக்கோட்டை பகுதியை சேர்ந்த துப்பாக்கி முருகன் என்பவரின் மகன் செல்வகணபதி என்ற விஜய். 24 வயது நிரம்பிய விஜய் ஓட்டுநராக இருந்துவந்துள்ளார். இந்தநிலையில் ஆலங்குடி கலிபுல்லா நகர் பகுதியில் கடந்த மாதம் 28-ந் தேதி இரவு மதுபோதையில் நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் விஜயை ஒரு தரப்பினர் அரிவாளால் வெட்டியுள்ளனர்.

இதனையடுத்து அங்கிருந்தவர்கள் விஜயை மீட்டு ஆம்புலன்சில் சிகிச்சைக்காக ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். பின்னர் விஜயின் உடலை பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து விஜயின் தாய் திலகவதி கொடுத்த புகாரின்பேரில் ஆலங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், ஆலங்குடி பகுதியை சேர்ந்த செந்தில்ராஜா மற்றும் அவரது சகோதரர் சின்னகண்ணு, போஸ் மகன் வெள்ளைச்சாமி, விமல், வீரமணி, சம்சா கண்ணன், கவுதம், சூரியா, தபசு முருகன் ஆகிய 9 பேரை ஆலங்குடி போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Murder #alangudy
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story