ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேருக்கு கொரோனா! தொற்று பரவியது எப்படி?
9 person affected by corona in one family
விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை கடந்து பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 112 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள இல்லோடு கிராமத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அப்பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் சென்னையில் உள்ள கார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்துள்ளார். இவர் 10 நாட்களுக்கு முன்பு சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு வந்ததாக கூறப்படுகிறது.
அந்த நபருக்கு 2 நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் மேலும் அவரது குடும்பத்தைச் சார்ந்த அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவரது குடும்பத்தில் உள்ள 9 பேருக்கும் தோற்று உறுதி செய்யப்பட்டது.
இதனால் விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,243 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் விழுப்புரம் மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362