கேம் விளையாட செல்போன் தராததால் 8ம் வகுப்பு சிறுவன் தற்கொலை.!
கேம் விளையாட செல்போன் தராததால் 8ம் வகுப்பு சிறுவன் தற்கொலை.!

வேலூர் மாவட்டத்தில் உள்ள பெரியபாலப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் வசந்தகுமார். முன்னாள் ராணுவ வீரரான இவருடைய மனைவி கீதா. இந்த தம்பதியினருக்கு தாமு என்ற மகன் 8ம் வகுப்பு படித்து வந்துள்ளான்.
இதில் வசந்தகுமார் கடந்த சில நாட்களுக்கு முன்பு காலமானார். சிறுவன் தாமு எப்போதும் செல்போனில் கேம் விளையாடுவதை வழக்கமாக இருந்துள்ளார். இதனை தாய் கண்டித்தும் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து விளையாடி வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி இரவு முழுவதும் சிறுவன் தாமு ஆன்லைனில் கேம் விளையாடியுள்ளார். இதனால் அவருடைய தாயார் சிறுவனை கண்டித்து திட்டியுள்ளார்.
இதனால் மனமுடைந்த சிறுவன் தாமு மொட்டை மாடிக்கு சென்று பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த தாய் கீதா கதறி அழுதுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த வேலூர் போலீசார் சிறுவனை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து தாய் கீதாவிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.