×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

8 வயது சிறுமி கடத்தி பாலியல் பலாத்காரம்.. இளைஞர் குண்டர் சட்டத்தில் கைது!

8 வயது சிறுமி கடத்தி பாலியல் பலாத்காரம்.. இளைஞர் குண்டர் சட்டத்தில் கைது!

Advertisement

ஊட்டி அருகே உள்ள தலைக்குந்தா பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமி அப்பகுதியில் உள்ள கோயில் திருவிழாக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த 23 வயதான அஜித்குமார் என்ற இளைஞர் சிறுமியை அழைத்து செல்வதாக கூறி அருகில் இருந்த காட்டுப் பகுதிக்கு அடுத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

நீண்ட நேரமாகியும் சிறுமி வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அக்கம் பக்கத்தில் சிறுமியை தேடினர். அப்போது காட்டில் வளர்த்த காயத்துடன் சிறுமி மயக்க நிலையில் கிடந்துள்ளார். இதனையடுத்து உடனடியாக சிறுமியை மீட்ட பெற்றோர் ஊட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அப்போது சிறுமியிடம் பெற்றோர் விசாரித்தலில் அஜித் குமார் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறியுள்ளார். இதனையடுத்து கிராம மக்கள் அஜித்குமாரை பிடித்து தர்ம அடி கொடுத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து விரைந்து வந்த போலீசார் பலத்த காயமடைந்த அஜித்குமாரை போக்சோ உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Ooty #Kidnapped #Rap #harassment #Nilgiris
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story